காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை

 

தாராபுரம், ஏப்.15: தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திமுகவினர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக நகர செயலாளர் முருகானந்தம், நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், திமுக நகர, வார்டு பொறுப்பாளர்கள் உள்பட கலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

The post காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: