சுடுநீரை ஊற்றிய மனைவி உடல்வெந்து கணவன் பரிதாப சாவு: தக்கலை அருகே பரபரப்பு

 

தக்கலை, ஏப். 15: தக்கலை அருகே கணவன் மீது மனைவி சுடுநீர் ஊற்றினார். இதில் படுகாயமடைந்த கணவன் சிகிச்சை பலனின்றி இறந்தார். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குழிக்கோடு வண்டாவிளையைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (58). இவரது மனைவி லதா (48). இவர்களுக்கு திருமணம் ஆகி 26 வருடங்கள் ஆகிறது. இரண்டு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்டிட வேலை வந்த ஹரிதாஸ் தற்போது வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 7ம்தேதி இரவு ஹரிதாஸ் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த லதா வீட்டில் இருந்த சுடுநீரை எடுத்து கணவனின் முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த ஹரிதாஸ் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஹரிதாஸ் தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் லதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஹரிதாஸ் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து லதாவை பிடித்து தக்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சுடுநீரை ஊற்றிய மனைவி உடல்வெந்து கணவன் பரிதாப சாவு: தக்கலை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: