சரக்கு ரயில் தடம் புரண்டது

ஜோலார்பேட்டை: சென்னை ஹார்பரில் இருந்து கன்டெய்னர் சரக்கு ரயில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் பீல்டுக்கு செல்ல 41 பெட்டிகளுடன் நேற்று புறப்பட்டது. மாலை 5.30 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையம் பகுதியில் சரக்கு ரயில் லூப்லைனில் இருந்து மெயின் லைனுக்கு மாறியது.

அப்போது ரயில் இன்ஜின் பகுதியில் இருந்து 16வது பெட்டியின் முன்பக்க சக்கரம் அதிக சத்தத்துடன் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்ட விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த வந்த ரயில்வே அதிகாரிகள் இரண்டரை மணி நேரம் போராடி இரவு 8 மணிக்கு பெட்டியை தண்டவாளத்திற்கு கொண்டு வந்தனர்.

The post சரக்கு ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Related Stories: