டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை

மானாமதுரை, ஏப்.14: மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தில் டாஸ்மாக் கடை கொம்புக்காரனேந்தல் ரோட்டில் உள்ளது. இந்த கடையில் கடந்த மார்ச் 28ம் தேதி பூட்டுகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். முடியாததால் முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடையில் இருந்த மதுபானங்கள், பணம் உள்ளிட்டவை தப்பியது. மர்ம நபர்களின் கொள்ளை முயற்சி தொடர்பாக சூப்பர்வைசர் முருகேசன் மானாமதுரை ேபாலீசில் புகார் அளித்தார்.

இதில் மானாமதுரை கஞ்சிமடை கிராமத்தை சேர்ந்த பழனிமுருகன் மகன் கவுதம்(20), ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடி கிராமம் சேதுபதி நகரை சேர்ந்த முருகன் மகன் வெங்கடேசன்(22), திண்டுக்கல் மாவட்டம் ராமராஜபுரம் கிராமம் மட்டப்பாறை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சோனைமுத்து(27), சிவகங்ைக மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் அசோக் (எ)முத்துப்பாண்டி(25) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்ததால் மானாமதுரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

The post டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை appeared first on Dinakaran.

Related Stories: