தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்

தென்காசி, ஏப்.14: தென்காசி மாஸ் பாராமெடிக்கல் கல்லூரியில் தென்காசி இந்தியன் ரெட் கிராஸ் வட்ட கிளை சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வட்டக்கிளை துணைத் தலைவர் கருப்பையா, சேர்மன் டாக்டர் வேதமூர்த்தி, துணை சேர்மன் டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆலோசனைப்படி யூத் ரெட்கிராஸ் மாஸ் கம்யூனிட்டி மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகளின் மூலம் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய மற்றும் பழைய வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சங்க தென்காசி வட்ட கிளைச் செயலாளர் முகமது அன்சாரி தலைமை வகித்தார். இதில் யூத் ரெட் கிராஸ் மாஸ் கல்வி நிறுவன மாணவிகள், பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

The post தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: