தொழிலாளியை சரமாரி தாக்கிய 2 பேர் கைது

ஓமலூர், ஏப்.14:ஓமலூர் அருகேயுள்ள பாரமங்கலம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (48), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமரேசன்(31), அவரது உறவினர் தமிழ்(20) ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், முனியப்பன் வீட்டிற்கு குமரேசன், தமிழ் இருவரும் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த முனியப்பனிடம், அவர்கள் தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குமரேசன், தமிழ் ஆகிய இருவரும், முனியப்பனை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தொளசம்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரேசன், தமிழ் ஆகியோரை கைது செய்தனர்.

The post தொழிலாளியை சரமாரி தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: