நர்சரி கார்டனில் தீ விபத்து

ஏற்காடு, ஏப்.14:ஏற்காடு அருகே லேடீஸ் சீட் செல்லும் வழியில், ரமேஷ் பிரபாகரன்(45) என்பவர் நர்சரி கார்டன் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான பூச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில், நர்சரி கார்டனில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இருப்பினும் ஏராளமான செடிகள், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

The post நர்சரி கார்டனில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: