திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது

திண்டுக்கல், ஏப். 14: திண்டுக்கல் மாவட்டகலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி சட்டம் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற உரிமத் தலங்கள் அனைத்தும் ஏப்.21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே 1ம் தேதி (புதன் கிழமை) மே தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்றைய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்வது ஏதும் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது appeared first on Dinakaran.

Related Stories: