துணைத் தலைவர் க.நவராஜ், துணைச் செயலாளர் க.தீனா, இயக்குனர் எஸ்.கருணாகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் எஸ்.முத்துராஜ் வரவேற்றார். பேரணியில் ”100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், உங்கள் வாக்கு உங்கள் உரிமை, என் ஓட்டு என் உரிமை” போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பள்ளி மாணவர்கள் சென்றனர். இதன் மூலம் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை அறிந்து கொண்டதாக தெரிவித்தனர்.
The post விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.