கோவையில் தேர்தல் பணிகளுக்கு பாஜகவினர் தங்களை அழைப்பதில்லை: பாமக மாவட்ட செயலாளர் அதிருப்தி

கோவை: கோவையில் தேர்தல் பணிகளுக்கு பாஜகவினர் தங்களை அழைப்பதில்லை என்று பாமக மாவட்ட செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார். பாமக அலுவலகத்திற்கு தற்போது வரை கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வரவில்லை. பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்த போதுகூட எங்களை அழைக்கவில்லை. மேலும், கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகளில் இருந்து மவுனமாக வெளியேறுகிறோம் என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கோவையில் தேர்தல் பணிகளுக்கு பாஜகவினர் தங்களை அழைப்பதில்லை: பாமக மாவட்ட செயலாளர் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: