எனவே, டெஸ்லா தொழிற்சாலையையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்தியாவுக்கு வர உள்ள எலான் மஸ்க், இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு ஆலையை அமைக்க ஆலோசித்து வருகிறார். இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவையும் சந்தையும் விரிவடைந்து செல்வதை பயன்படுத்திக் கொள்ள எலான்மஸ்க் திட்டமிட்டுள்ளார். பெட்ரோல் கார் தயாரிப்பு ஆலைகளின் மையமாக திகழும் சென்னையை மின்சார கார் தயாரிப்பு ஆலைகளின் தலைநகராக மாற்ற திமுக அரசு தீவிரம் காட்டிவருகிறது. உலகின் மிகப்பெரும் கார் தயாரிப்பு நிறுவனங்களின் மின்சார கார் தயாரிப்பு ஆலைகளையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
The post கார் தொழிற்சாலை தொடங்குகிறார் எலான் மஸ்க்?.. கார் தயாரிப்பு தலைநகராக தமிழ்நாட்டை மாற்ற திமுக அரசு உறுதி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்..!! appeared first on Dinakaran.