காங். முன்னாள் செய்தி தொடர்பாளர் குப்தா பாஜவில் அடைக்கலம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருந்தாலும் கட்சி தாவல் படலம் நீடிக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ரோஹன் குப்தா நேற்று பாஜவில் தஞ்சமடைந்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த ரோஹன் குப்தாவை, நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் குஜராத்தின் அகமதாபாத் தொகுதி வேட்பாளராக கடந்த 12ம் தேதி காங்கிரஸ் அறிவித்தது.

ஆனால் தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ரோஹன் குப்தா நேற்று பாஜவில் இணைந்தார்.

The post காங். முன்னாள் செய்தி தொடர்பாளர் குப்தா பாஜவில் அடைக்கலம் appeared first on Dinakaran.

Related Stories: