விவசாயிகள், மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். 40 சதவீதமாக இருந்த கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 22 சதவீதமாக குறைத்ததால் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் 2 ஆண்டுகளுக்குள் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு ஆட்சி எப்படி நடைபெற வேண்டும். ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post ஆட்சி நடத்துவது குறித்து தமிழகத்தில் பிரதமர் மோடி பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்: செல்வபெருந்தகை அட்வைஸ் appeared first on Dinakaran.