தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

காரியாபட்டி, ஏப்.11: காரியாபட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நிர்வாகிகள் நேற்று பிறை பார்த்ததாக அறிவிப்பு செய்தனர். இதையடுத்து விருதுநகர் காரியாபட்டி தவ்ஹீத் ஜமாத் சார்பாக நேற்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. புனித நோன்பு பெருநாளை கடைபிடிப்பது பற்றியும், நோன்பின் மகத்துவத்தை பற்றியும், அனைவரும் பல்வேறு சமூக பணிகள் செய்வது பற்றியும் தவ்ஹீத் ஜமாத் மருத்துவர் அணி தலைவர் மாஹீன் அபுபக்கர் பேசினார். சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.

The post தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Related Stories: