ஒட்டன்சத்திரம் ஜிஹெச்சில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

ஒட்டன்சத்திரம், ஏப். 11: ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது வட்டாட்சியர் சசி தலைமை வகித்து வாக்களிப்பதன் அவசியம், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பேசினார். இதில் தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் பிரபு சிவசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் காசி முருகபிரபு, மேற்பார்வையாளர் சுந்தரம், வருவாய் ஆய்வாளர் செல்வமங்கை, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், கிராம உதவியாளர்கள் விஜயபாஸ்கரன், பைசல் முகமது, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் சித்ராதேவி மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள், சுயஉதவி குழுவினர், ஜிஹெச் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரம் ஜிஹெச்சில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: