டிக்கெட் முன்பதிவு மையம் இன்று மதியம் வரை மட்டுமே

சேலம், ஏப்.11: ரம்ஜான் விடுமுறையையொட்டி ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையம் இன்று மதியம் வரை மட்டும் செயல்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை விடுமுறையையொட்டி நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று (11ம் தேதி) மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சேலம் ரயில்ேவ கோட்டத்தில், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், ஆத்தூர், சின்னசேலம் உள்ளிட்ட அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களில் இருக்கும் டிக்கெட் முன்பதிவு மையங்களும் காலை 8 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை போல்) மட்டும் செயல்படும். அதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள், 2 மணிக்கு முன்பாக வந்து புக்கிங் செய்து கொள்ளலாம். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post டிக்கெட் முன்பதிவு மையம் இன்று மதியம் வரை மட்டுமே appeared first on Dinakaran.

Related Stories: