வேடசந்தூரில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு அஞ்சலி

வேடசந்தூர், ஏப். 10: வேடசந்தூரில் கடந்த 1978ம் ஆண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கட்டை எடுத்தால் பட்டையை எடுப்போம் என்ற போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் நாச்சிமுத்து, கருப்பசாமி, சின்னசாமி, சுப்ரமணி, கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கம் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர். இவர்கள் உயிர் தியாகம் செய்ததற்கான 46ம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று செலுத்தப்பட்டது. முன்னதாக வட்டார விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் ஆத்துமேட்டில் இருந்து கோஷங்கள் எழுப்பியவாறு விவசாயிகளின் நினைவு ஸ்தூபிக்கு சென்றனர். அங்கு மலர் வளையம், மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அதிகளவில் கூட்டம் சேராமல் குறைந்த அளவிலான விவசாயிகளே பங்கேற்றனர். இந்நிகழ்வில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post வேடசந்தூரில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: