சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பூக்குழி திருவிழாவை காண திருவில்லிபுத்தூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலை தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பூக்குழி திருவிழாவையொட்டி நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து செருப்பு இல்லாமல் நடக்கும் பக்தர்களின் பாதம் சுடாமல் இருக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
மேலும் தேங்காய் நார் பரப்பப்பட்டிருந்தது. மேலும் ஒரு சில இடங்களில் தற்காலிக ஷவர்களும் அமைக்கப்பட்டிருந்தன. தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூக்குழி திருவிழாவை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் விழாக்கோலம் பூண்டது. ஏற்பாடுகளை தக்கார் முத்துராஜா, நிர்வாக அதிகாரி தேவி தலைமையில் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 13 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.