5ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,510க்கும், சவரனுக்கு ரூ.180 குறைந்து ஒரு சவரன் ரூ.52,080க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுபடியும் 6ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. அதன்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 45 ரூபாய் அதிகரித்து 6,660 ரூபாய்க்கும், ஒரு சவரன் 360 ரூபாய் அதிகரித்து 53,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு இதற்கு முன்னர் இருந்த அனைத்து உச்சத்தையும் முறியடித்தது. இது இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்தது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து ரூ.88க்கு விற்பனையாகிறது. கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்தது. 2020ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவிகிதம் இதுவாகும். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது, சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவது, சீன இளைஞர்கள் மத்தியில் தங்கத்தின் மோகம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை தொடர்ந்து அதிகரிக்க செய்துள்ளது.
The post வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.53,000ஐ தாண்டி விற்பனை; நகை விரும்பிகள் ஷாக்!! appeared first on Dinakaran.