தற்போது நடைபெற உள்ள தேர்தலில் செயல்படாமல் இருப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 2 முதலமைச்சர்களை கைது செய்துள்ளது. மோடி அரசு இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்பொழுது வேலைவாய்ப்பு அளிக்க தகுதியற்ற அரசாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் 83 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகிறார்கள். இளைஞர்களையும், விவசாயிகளையும் வஞ்சிக்கும் அரசாகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.
The post இளைஞர்களையும் விவசாயிகளையும் 10 ஆண்டாக பாஜ வஞ்சித்து வருகிறது: பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.