மோடி தலைமையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி போகிறது. இந்த தேர்தலில் பாஜ வெற்றிப்பெற்றால் நாடாளுமன்ற முறையை மாற்றிவிட்டு ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்து தான் ஜனாதிபதி ஆகலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார். திராவிட இயக்கம் உள்ளவரை அது நடக்காது. இந்தியாவில் மதிக்கப்படும் தலைவராக உயர்ந்திருக்கிறார் திருமாவளவன். வட நாட்டு தலைவர்களும் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வென்றுவிட்டோம் என்று நினைத்தால் தோல்வியில் விழுந்து விடுவீர்கள் மோடி. இங்கே வந்து மோடி, நட்டாக்கள் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். இந்தியில் எழுதிவைத்து பாரதி- திருக்குறளை பேசி எங்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்.
5 மாடி ஹோட்டல் போல இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சாவர்க்கர் பிறந்தநாளில் திறந்துவைத்தார் மோடி. கோட்சேயின் கூட்டம் பகிரங்கமாக உலவுகின்றனர் இன்று. நமது மொழிக்கு மோடியின் வடிவில் ஆபத்து வருகிறது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் முன்மெழிந்ததை நான் வழிமொழிகிறேன். தமிழ்நாடு இந்துத்துவ சக்திகளுக்கு மரண அடி கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்துத்துவ சக்திகளுக்கு தமிழ்நாடு மரணஅடி கொடுக்கும்: வைகோ பொளீர் appeared first on Dinakaran.