நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

காரியாபட்டி, ஏப். 7: காரியாபட்டி அருகே கல்குவாரியில் குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியானார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஆவியூர் பகுதியை சேர்ந்தவர் அழகு மலைக்கள்ளன் மகன் அருண்பாண்டி (15). இவர் ஆவியூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பருடன் கடம்பன்குளம் ரோட்டில் உள்ள கல்குவாரி கிடங்கில் குளிப்பதற்காக வந்த போது அருள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

இதை பார்த்த சக நண்பர் உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாணவரின் பெற்றோர் வந்து பார்த்த போது அருள் தண்ணீரில் முழ்கியதை தெரிய வந்தது. உடனடியாக ஆவியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அருண்பாண்டியின் உடலை மீட்டனர். மேலும் இது குறித்து ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: