இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,510க்கும், சவரனுக்கு ரூ.180 குறைந்து ஒரு சவரன் ரூ.52,080க்கும் விற்கப்பட்டது. இது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுபடியும் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். சவரன் ரூ.53 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோரை மேலும், மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post தங்கம் விலை ஒரே நாளில் ரூ.840 உயர்வு; சவரன் ரூ.53 ஆயிரத்தை நெருங்கியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.