தற்போது மோடி அரசு, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளத்தை மொத்தமாக காலி பண்ணி விட்டார்கள். இந்திய மக்களிடம் இருந்தும் பெறப்படும் ஜிஎஸ்டி வரி, வருமான வரி உள்ளிட்ட அனைத்து பணத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து விட்டார். 70 ஆண்டுகளாக மக்களுக்காக உருவாக்கி வைத்திருந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் மோடி 10 ஆண்டுகளில் தனியாருக்கு தாரை வார்த்து விட்டார். துறைமுகங்கள் கூட தப்பிக்கவில்லை. பாஜவிற்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தமிழகத்தில் ஒரு இடம் கூட பாஜவால் வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ் படித்த அண்ணாமலை: நடிகர் கருணாஸ் காட்டம் appeared first on Dinakaran.