கீழப்பழுவூர் அருகே டூவீலர் மீது அரசு பேருந்து மோதல் முதியவர் பலி: டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்

 

அரியலூர், ஏப்.6: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னத்தம்பி மகன் முத்தையன்(62), மருதமுத்து மகன் சின்னையன்(60), காட்டுப்பிரிங்கியம் நாகராஜன் மகன் ரமேஷ்(44). இவர்கள் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கல்லக்குடியிலிருந்து காட்டுப்பிரிங்கியம் கிராமத்துக்கு நேற்று சென்றனர்.

சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை காட்டுப்பிரிங்கியம் அருகே கடக்க முயன்ற போது ஜெயங்கொண்டத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்தையன் அதே இடத்திலேயே உயிரிழந்தார். இதில் சின்னையன், ரமேஷ் மற்றும் பேருந்து ஓட்டுநர் அரியலூர் மாவட்டம் காங்கியம்குறிச்சியை சேர்ந்த வேல்முருகன்(44) ஆகியோர் காயமடைந்தனர். விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கீழப்பழுவூர் அருகே டூவீலர் மீது அரசு பேருந்து மோதல் முதியவர் பலி: டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: