கனிமொழி எம்பியை ஆதரித்து காங்.தலைவர் செல்வபெருந்தகை கோவில்பட்டியில் இன்று பிரசாரம்

தூத்துக்குடி, ஏப்.6: கோவில்பட்டியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்வதாக மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மக்களவைத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று (சனிக்கிழமை) கோவில்பட்டியில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். அதன்படி, அவர் இன்று மாலை 5 மணிக்கு கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு பிரசாரம் மேற்கொள்கிறார். எனவே, இந்நிகழ்வில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் திரளாகப்பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கனிமொழி எம்பியை ஆதரித்து காங்.தலைவர் செல்வபெருந்தகை கோவில்பட்டியில் இன்று பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: