இன்று தபால் வாக்குப்பதிவு

தேனி, ஏப்.6: தேனி தொகுதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.6) நடக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் வீடு தேடி வரும்போது, தகுதிபடைத்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கினை பதிவு செய்து கொள்ளலாம். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்.9ம் தேதி நடைபெற உள்ளது. தேனி தொகுதியில் 1234 மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு செய்ய படிவம் வழங்கப்பட்டுள்ளது.

The post இன்று தபால் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: