அவிநாசியில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்

அவிநாசி, ஏப்.6: அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி குலசேகரன் தலைமையிலான நிலைப்பணி கண்காணிப்பு-குழுவினர், நேற்று வாகனச் சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக, காரில் வந்த ஈஸ்வரி என்பவரை, பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி, சோதனை நடத்தினர். அப்போது, அவர் உரிய ஆவணங்கள் இன்றி, ஒரு லட்சத்து 40ஆயிரம் ரூபாயை கொண்டு சென்றது தெரியவந்து, பறக்கும் படையினர் கைப்பற்றினர். பறிமுதல் செய்த ரூ.1.40 லட்சத்தை அவிநாசி கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனன் முன்னிலையில், தேர்தல் பறக்கும் படையினர், அவிநாசி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

The post அவிநாசியில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: