கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

பல்லடம், ஏப்.6: பல்லடம் அருகே நாச்சிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (36). இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து இருந்தார். மனைவியை பிரிந்த ஏக்கத்தில் தொட்டிபாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டார். அவினாசிபாளையம் போலீசார் செல்வக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: