இந்நிலையில் கணவர் வீட்டைவிட்டு சென்றதால் மன வேதனையில் இருந்த வரலட்சுமி, தனது மகனையும், மகளையும் அழைத்து கொண்டு கடந்த 29ம் தேதி அருகே உள்ள கோயிலுக்கு செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு புறப்பட்டார். அதன்பின்பு அவர்கள் வீடு திரும்பவில்லை. வரலட்சுமியின் தாயார் 3 பேரை தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில்தான் நேற்று முன்திம் கோவை நஞ்சுண்டாபுரம் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு பெண் உள்பட 3 பேரின் உடல்கள் கிடப்பதும், அவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
கோவை ரயில்வே போலீசார் அந்த உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர்கள்சென்னையில் மாயமான வரலட்சுமி, யுவராஜ், ஜனனி என்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டைவிட்டு வெளியேறிய வரலட்சுமி கோவைக்கு வந்து, போத்தனூர் பகுதியில் மகன், மகளுடன் திரிந்துள்ளார். கடன் தொல்லையாலும், கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாலும் விரக்தியடைந்த அவர் நஞ்சுண்டாபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே கேரளா சென்ற ரயிலில் தனது மகன், மகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சென்னையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து 3 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
The post கணவர் மாயம், கடன் தொல்லையால் விரக்தி கோவையில் ரயில் முன் பாய்ந்து தாய், மகன், மகள் தற்கொலை: சென்னையை சேந்தவர்கள் appeared first on Dinakaran.