ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவரது சட்டையும் கிழிந்திருக்கிறது. அதோடு, தகராறை தடுத்த நகர தலைவரின் முகத்தில் குத்து விழுந்து ரத்தம் கசிந்துள்ளது. ஓட்டு கேட்கப்போன இடத்தில் கோஷ்டி மோதல் வெடித்ததால், ஓட்டு கேட்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்துள்ளார் வேட்பாளர். இதுதொடர்பான பஞ்சாயத்து, கட்சியின் மேலிடம் வரை சென்றிருக்கிறதாம். பாமகவில் இருந்து பாஜகவுக்கு தாவி, திருவண்ணாமலை ெதாகுதியில் சீட் வாங்கியதால், அஸ்வத்தாமனுக்கு ஏற்கனவே கூட்டணி கட்சியான பாமகவின் ஒத்துழைப்பு இல்லையாம். இப்போது, பாஜவிலும் ேகாஷ்டி மோதல் வெடித்திருக்கிறது. எனவே, கிடைக்கிற கொஞ்ச ஓட்டும் வீணாகிபோகுமே என்று கவலையில் இருக்கிறாராம் பாஜ வேட்பாளர்.
The post ஓட்டு கேட்க போன இடத்தில் ‘கும்மாங்குத்து’ பாஜ வேட்பாளர் ‘ஜூட்’ appeared first on Dinakaran.