மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

 

தா.பழூர்,ஏப்.5: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணி சென்றபோது அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டியை பறிமுதல் செய்து மாட்டு வண்டியை ஓட்டி வந்த இருவரை கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் அரங்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அரங்கோட்டை கொள்ளிடகரை சாலையில் இருந்து வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்தனர் . மாட்டு வண்டியில் அரசு அனுமதி இன்றி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரியவந்தது . பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மாட்டு வண்டி தொழிலாளர்களான அரங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ( 64), தியாகராஜ (48) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: