அகரம்சீகூர் வெள்ளாற்று பாலத்தில் நடந்து சென்ற வாலிபர் லாரி மோதி உயிரிழப்பு

 

குன்னம், ஏப்.5: அகரம் சீகூர் வெண்ணாற்று பாலத்தில் நடந்து சென்ற வாலிபர் மீது லாரி மோதி உயிரிழந்தார.திட்டக்குடி திருமஞ்சன வீதியைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை மகன் பாண்டியன் (53). இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும். சிவானி என்ற 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் வழக்கம்போல் அகரம்சீகூர் வெள்ளாற்று பாலத்தில் நடைபயணம் சென்று கொண்டிருந்தார் அப்போது அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சிமெண்ட் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகாலை முதலே அதிக அளவில் வருவதால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் நடைபெற்று வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் சிமெண்ட் லாரிகள் அதிவேகமாக செல்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post அகரம்சீகூர் வெள்ளாற்று பாலத்தில் நடந்து சென்ற வாலிபர் லாரி மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: