கோடை வெப்பம் அதிகரிப்பு அமராவதி அணை நீர்மட்டம் 46 அடியாக சரிவு

உடுமலை, ஏப். 5: கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் அமராவதி அணையின் நீர்மட்டம் 46 அடியாக சரிந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.

அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.கோடை வெப்பம் அதிகரிப்பால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று காலை நீர்மட்டம் 46.20 அடியாக இருந்தது. அணைக்கு 18 கனஅடி நீர்வரத்து இருந்தது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.இன்னும் 2 மாதங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே, அணை நீர்மட்டம் மேலும் குறையும் நிலை உள்ளது.

The post கோடை வெப்பம் அதிகரிப்பு அமராவதி அணை நீர்மட்டம் 46 அடியாக சரிவு appeared first on Dinakaran.

Related Stories: