அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: கண்டம் தாண்டி இலக்குகளை அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் – அக்னி பிரைம் ஏவுகணை ஒடிசாவின் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சோதனை மையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம், ஒன்றிய ராணுவம் இணைந்து, 1,000 முதல் 2,000 கிமீ தூரம் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டன. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: