சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கவும், குறிப்பாக பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேற்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்த இயக்கம் திமுக அதனால் தான் பெண்கள் எப்போதும் திமுக நன்றி உணர்வோடு உள்ளனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால், நாட்டில் அனைத்து உரிமைகளும் பறிபோக்கும் என்றும் நாட்டில் சுந்தந்திரம் என்பது இருக்காது, குலத் தொழில் திட்டம் மீண்டும் அமல்ப்படுத்துவது உறுதி என்றும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிக்கு வாக்களிக்க வேண்டும். திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் பூபதி, விசிக மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், தொகுதி பொறுப்பாளர் மனோகரன், நெசவாளரணி மாநில துணைத் தலைவர் நாகலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ம.கிரண், ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சி.என்.சண்முகம், அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் குலத்தொழில் திட்டம் செயல்படுத்துவார்கள்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு appeared first on Dinakaran.