விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

மதுராந்தகம்: விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்து முடித்த மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, விவேகானந்தா வித்யாலயா குழும பள்ளி தலைவர் லோகராஜ் தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் மங்கையர்கரசி, தலைமை முதல்வர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் கீதா அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கின்னஸ் சாதனை வீராங்கனை சக்திபூரணி மற்றும் மருத்துவர் பிரவீன்குமார் கலந்துகொண்டு யுகேஜி படித்து முடித்த சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவேகானந்தா பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

The post விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: