தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 435.85 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவாகியுள்ளது. முந்தைய உச்சபட்ச நுகர்வு நேற்று முன்தினம் 430.13 மில்லியன் அலகுகளாக இருந்தது. மின் விநியோகத்தை தொடர்ந்து சீராக வழங்கி வருகிறோம். மின்வெட்டே இல்லாமல் சீரான மின்சார விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: