போலீசார் கொடி அணிவகுப்பு

சங்ககிரி, ஏப்.4: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடு பணியின் ஒரு பகுதியாக சங்ககிரி நகர் முழுவதும் துணை ராணுவத்தினரும், போலீசாரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து கொடி அணி வகுப்பை டிஎஸ்பி ராஜா தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினி (சங்ககிரி), சுமித்ரா (எடப்பாடி), குமரவேல்பாண்டியன் (கொங்கணாபுரம்) மற்றும் போலீசார் துணை ராணுவத்தினர் ஊர்வலமாக சென்றனர். சங்ககிரி, பழைய பஸ் நிலையம், வி.என் பாளையம், சந்தைப்பேட்டை, பழைய எடப்பாடி சாலை வழியாக பயணியர் மாளிகையில் கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக இத்தகைய கொடி அணி வகுப்பை நடத்தி வருகிறோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல்வாழப்பாடியில், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து பஸ் நிலையம் வழியாக பேளூர் பிரிவு சாலை வரை போலீசாருடன், துணை ராணுவத்தினர் அணி வகுப்பு நடத்தினர். இதில் வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post போலீசார் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: