இதனால் அப்பேருந்துகளின் பின்னால் வேகமாக வரும் கார், கனரக லாரி உள்பட பல்வேறு வாகனங்கள், சாலையில் நின்றிருக்கும் பேருந்துகள்மீது மோதி விபத்தில் சிக்கி வருகின்றன. மேலும் அதிகளவிலான வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அத்துடன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளில் செல்ல வேண்டிய வெளியூர் பயணிகள், ஜிஎஸ்டி சாலையை ஆபத்தான முறையில் கடந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல வேண்டி உள்ளது. அங்குள்ள சென்டர் மீடியனை அகற்றிவிட்டு, அவ்வழியே மாநகர பேருந்துகள் வந்து செல்லவும், அங்கு சிக்னல் அமைக்கவும் நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியூர் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே நடுரோட்டில் இறக்கி விடக்கூடாது: வெளியூர் பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.