நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம்: நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்; அதிமுகவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை வேட்பாளராக நினைத்துக் கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட வேண்டும்.

என்னுடைய இந்த நிலைக்கு எடப்பாடி தொகுதி மக்களாகிய நீங்கள் தான் காரணம். நான் உங்களுக்கு கடமை பட்டு உள்ளேன். எடப்பாடி தொகுதி அதிமுகவின் கோட்டை, யாராலும் கைப்பற்ற முடியாது. இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான்… கட்சி பொதுச்செயலாளர் தான். அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும். தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கான ஆதரவு அலை வீசி வருகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் இவ்வாறு கூறினார்.

The post நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலை வீசுகிறது: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: