பூலுவப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பட்டமளிப்பு விழா

 

திருப்பூர், ஏப்.3: திருப்பூர் வடக்கு பூலுவப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் 5ம் வகுப்பில் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா பள்ளியில் நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் குமார் முன்னிலை வகித்தார்.

திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் முஸ்ரக் பேகம் மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார். இதில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது குழந்தைகள் பட்டம் வாங்குவதை கண்டு மகிழ்ந்தனர். அரசு பள்ளிகளில் இதுபோன்ற முன்னெடுப்புகள் பெற்றோர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன. முடிவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

The post பூலுவப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: