அழகர்கோயிலில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்

 

அழகர்கோவில், ஏப். 3: அழகர்கோயிலில் சித்திரை திருவிழா குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆலோசனை மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழா வருகிற ஏப்.19ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக நேற்று கோயிலில், மதுரை மண்டல இணை ஆணையர் செல்லதுரை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்தின் போது திருக்கோயிலின் துணை ஆணையர் கலைவாணன், அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி, அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கோயில் கண்காணிப்பாளர் பிரதீபா மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோயிலின் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள், திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கும் சீர்பாதம் தாங்கிகள் ஆகியோர் சித்திரை திருவிழா குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

The post அழகர்கோயிலில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: