அரூர் வாணீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

அரூர்,ஏப்.3: அரூர் கடைவீதியில் உள்ள ஸ்ரீவாணீஸ்வரி சமேத ஸ்ரீவாணீஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக காலபைரவருக்கு அஷ்டமி யாகம் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வாணீஸ்வரர் வழிப்பாடு சங்கம் உறுப்பினர்கள் தர்மகர்த்தா முடிமன்னன், அர்ச்சகர்கள் நாகராஜ், ரகு, சதீஷ் ஆகியோர் செய்திருந்தனர். அதேபோல் கோட்டை காளியம்மன் கோயிலிலும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடைபெற்றது.

The post அரூர் வாணீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: