இந்து, முஸ்லிம், கோயில், மசூதி பிரச்னைகளை அடிப்படையாக கொண்ட தேர்தலை இந்திய வாக்காளர்கள் விரும்பவில்லை. சிறந்த பொருளாதார கொள்கை, பணவீக்கம் குறைப்பு, வேலை வாய்ப்பு உருவாக்கம், விவசாயிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வது போன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்தும் அரசை மக்கள் விரும்புகின்றனர். வரும் தேர்தலில் அதிகரிக்கும் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாய நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வு பிரச்னைகளில் பாஜவுக்கு மக்கள் பாடம் கற்று தருவார்கள். தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக, வௌிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான களத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். நடைபெறவுள்ள தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.இவ்வாறு கூறினார்.
The post 400 இடங்களில் வெற்றி என்பது பாஜவின் ஆணவம்: மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: காங்கிரஸ் உறுதி appeared first on Dinakaran.