இந்நிலையில், ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவில், ‘தேர்தல் பத்திரம் விற்பது மற்றும் பணமாக்குவது தொடர்பாக எஸ்பிஐயின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளுக்கு தேர்தல் செயல்பாட்டு நடைமுறை விவரங்களை வழங்க வேண்டும்’ என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எஸ்பிஐ வங்கி, ‘இது ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவில் வருவதால் விவரங்களை வெளியிட முடியாது’ என கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அஞ்சலி பரத்வாஜ், ‘‘தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, அனைத்து விவரங்களை வெளியிட உத்தரவிட்ட பிறகும், எஸ்பிஐ வங்கி முக்கிய தகவல்களை தெரிவிக்காமல் மறுத்து வருவது ஆச்சரியமாக உள்ளது’’ என்றார்.
The post விற்றல் மற்றும் பணமாக்கல் குறித்த தேர்தல் பத்திரம் தகவலை வெளியிட எஸ்பிஐ மறுப்பு: இன்னும் என்ன ரகசியம் வேண்டி கிடக்கு என ஆர்டிஐ ஆர்வலர் கேள்வி appeared first on Dinakaran.