பாஜ நிர்வாகி மீது வழக்கு

அருப்புக்கோட்டை, ஏப்.2: அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்த பாஜ தேசிய சிறுபான்மை அணி செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரை ஆதரித்து அருப்புக்கோட்டை நாடார் சிவன்கோவில் பகுதியில் பாஜ தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் செய்வதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என்று தேர்தல் பறக்கும்படை அலுவலர் சரவணன் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பாஜ தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்தார்.

The post பாஜ நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: