ஆம் ஆத்மி மாஜி எம்பி காங்கிரசில் சேர்ந்தார்

புதுடெல்லி: கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலம் பாட்டியலா தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக இருந்தவர் தரம் வீர் காந்தி. 2016ல் ஆம் ஆத்மியில் இருந்து விலகிய தரம் வீர் நவான் பஞ்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தரம் வீர் காந்தி நேற்று டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா, பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார்.

The post ஆம் ஆத்மி மாஜி எம்பி காங்கிரசில் சேர்ந்தார் appeared first on Dinakaran.

Related Stories: