ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. நாடு முழுவதும் 291 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 21 நகரங்களிலும் தேர்வுகள் நடைபெற்றன.இந்நிலையில், ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் வரும் 4 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்.3ல் தொடங்கி மார்ச் 2 வரை நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகிறது.
குறிப்பாக வரும் 4, 5, 6, 8, 9 தேதிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான முதல் தாள் நடக்கிறது. ஏப்ரல் 12ம் தேதி, பி.ஆர்க்., பி.பிளானிங். படிப்புகளுக்குத் தனித்தனியாகவும் ஒரே தேர்வாகவும் மெயின் தேர்வு நடைபெறுகிறது. இவற்றில் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்காக ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 8,9 மற்றும் 12ம் தேதி தேர்வு எழுதவிருக்கும் தேர்வர்களுக்கு பின்னர் வெளியிடப்படும் என என்.டி.ஏ அறிவித்துள்ளது. தேர்வர்கள் jeemain.nta.ac.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, https://jeemain.nta.nic.in/ மற்றும் 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
The post ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.