தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் தபால் வாக்கு தர மறுப்பதா? வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பணி புரியும் ரயில்வே ஊழியர்களுக்கு இந்த தபால் வாக்குரிமை வழங்கப்படவில்லை. இது கண்டனத்துக்குரியது.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க முடியாது என்பதை ஏற்க இயலாது. எனவே தேர்தல் ஆணையம் இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒன்றிய தேர்தல் ஆணையம் தமிழக ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வழங்க வலியுறுத்துகிறேன்.

The post தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் தபால் வாக்கு தர மறுப்பதா? வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: